jkr

எந்திரன் படப்பிடிப்பு முடிந்தது!


ரஜினி நடிக்க சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் எந்திரன் படப்பிடிப்பு முடிவடைந்தது.

படத்துக்கான பேட்ச் அப் காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது ரஜினி இந்தப் படத்துக்கு டப்பிங் பேசி வருகிறார்.

ரூ 180 கோடியில் தயாராகிவரும் எந்திரன் படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஒரு வருடத்துக்கு மேல் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த வாரம் முடிவடைந்தது.

இப்படத்தில் ரோபோ, விஞ்ஞானி என இரு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. ரோபோட்ரானிக்ஸ் என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தி பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இந்தப் படத்துக்கு சவுன்ட் டிசைனராக பணியாற்றுகிறார்.

படப்பிடிப்பு முடிந்தாலும், இன்னும் இரு பாடல்கள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றை புனே மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. பின்னர் கிராபிக்ஸ் பணிகள் பாக்கியுள்ளன.

இன்னும் இருபது நாட்களில் ரஜினியின் டப்பிங் பணிகள் முடிந்ததும், வெளிநாட்டுக்குப் பறக்கும் எந்திரன் குழு, பாடல் காட்சிகளை முடித்துக் கொண்டு திரும்புகிறது. படம் வெளியாவது சித்திரைத் திருநாளிலா... தீபாவளிக்கா என்பது இன்னும் முடிவாகவில்லை.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "எந்திரன் படப்பிடிப்பு முடிந்தது!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates