ஜனாதிபதி - மக்கள் சந்திப்பு : இன்றிரவு நேரடி அஞ்சல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி-மக்கள் சந்திப்பு, (ஜனாதிபதி ஜனஹமுவ) நிகழ்ச்சி அலரி மாளிகையில் இன்று இரவு 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, ஏ. எல். எம். அதாவுல்லா, பந்துல குணவர்தன, சம்பிக்க ரணவக்க, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், எம்.பி. விமல் வீரவன்ச ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நிதியமைச்சு மற்றும் திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளி, ஒலிபரப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.







0 Response to "ஜனாதிபதி - மக்கள் சந்திப்பு : இன்றிரவு நேரடி அஞ்சல்"
แสดงความคิดเห็น