jkr

கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதிகளிடையே வாய்த்தர்க்கம் மட்டுமே ஏற்பட்டது:உதவி ஆணையாளர்


கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இன்று காலை தமிழ்-சிங்கள கைதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

பிரதி நீதி அமைச்சர் வி. புத்திரசிகாமணியிடம் இது குறித்து கேட்ட போது, பெரிதாகப் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை என்றும் கைதிகளிடையே வாய்த்தர்க்கம் மட்டுமே ஏற்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்ததாக எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு நேரில் சென்று, உதவி சிறைச்சாலை ஆணையாளர் கெனத் பெர்னாண்டோவிடம் நாம் கேட்ட போது,

"இன்று காலை 8.30 மணியளவில் கைதிகளைக் கணக்கெடுப்பதற்காக அதிகாரி ஒருவர் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிவுக்குச் சென்றிருந்த சமயம், அங்கிருந்த கைதி ஒருவர் இவர் மீது கல்லெறிந்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த சிங்கள கைதிகளுக்கும் தமிழ்க் கைதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட கைதிகளைச் சிறைச்சாலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதன் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை" என்றார்.

இது குறித்து தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் உதவி சிறைச்சாலை ஆணையாளர் கெனத் பெர்னாணாண்டோ தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதிகளிடையே வாய்த்தர்க்கம் மட்டுமே ஏற்பட்டது:உதவி ஆணையாளர்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates