கல்குடாவில் அரிய 'காட்டு அணுங்கு' விலங்கினம் கண்டுபிடிப்பு

கல்குடா பொலிஸ் பிரிவின், பாசிக்குடா பகுதியில், அநாதரவான நிலையில், இலங்கையில் அருகிவரும் காட்டு அணுங்கு (எறும்பு தின்னி) விலங்கு ஒன்றை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து கல்குடா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வன ஜீவராசிகள் மட்டக்களப்பு சுற்றுவட்டார பாதுகாப்பு அதிகாரி என்.சுரேஷ்குமார் தலைமையில், உதவி பாதுகாப்பு அதிகாரி ஏ.டி.பெஞ்சமின், வன ஜீவராசி பாதுகாப்பு உத்தியோகத்தர்களான ஜீ.பிரசாந்த், எஸ்.குபேரலிங்கன், ரீ.தேனுவர, ரீ.தஸநாயக்க ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்தக் காட்டு அணுங்கு விலங்கைக் கண்டுபிடித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறமான பெரியபுல்லு மலைக்காட்டுப் பகுதிக்கு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் கொண்டு செல்லப்பட்ட இவ்விலங்கு, அங்கு சுதந்திரமாக விடப்பட்டதாக மட்டு.மாவட்ட அரச ஊடக அதிகாரி பி.ரீ.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.







0 Response to "கல்குடாவில் அரிய 'காட்டு அணுங்கு' விலங்கினம் கண்டுபிடிப்பு"
แสดงความคิดเห็น