விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணைக் காணவில்லை என முறைப்பாடு

பொகவந்தலாவைப் பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற பெண் ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை மேற்பிரிவைச்சேர்ந்த இரு பெண்கள் நேற்று விறகு சேகரிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் ஒரு பெண் மாயமாகி உள்ளார்.
தோட்டத்தில் உள்ளவர்கள் பலர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தேடியும் அப்பெண் குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்துப் பொகவந்தலாவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.







0 Response to "விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணைக் காணவில்லை என முறைப்பாடு"
แสดงความคิดเห็น