jkr

கிழக்கில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையம் திறப்பு


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா ஏ.பியூடெனிஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையம் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.

அம்மாவட்டத்தில் உள்ள 4,000 பாற்பண்ணை விவசாயிகளின் அன்றாட வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவரான 'யு.எஸ்.எய்ட்' இப்புதிய ஐஸ் கிறீன் உற்பத்தி நிலையத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு 3.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை, அமெரிக்காவின் பிரபல பால் உற்பத்தியாளரான 'லாண்ட் ஓ லேக்' , மற்றும் இலங்கையின் பிரபல விவாசாய நிறுவனமான சிஐசி ஆகியவற்றுக்கு வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர்,

"கிழக்கில் புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அமெரிக்கா பெருமையடைகின்றது. இத்திடத்தின் மூலம் விவசாயிகளின் நாளாந்த வருமானம் அதிகரிப்பதுடன் இலங்கையில் பால் உற்பத்தி தரமடையக் கூடியதாக இருக்கும். இறக்குமதி செய்யப்படும் பாற் பொருட்களின் அளவும் குறையும்" எனத் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் பங்குபற்றியுள்ள மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கு பால் உற்பத்தித் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கையில் உள்நாட்டு பால் உற்பத்தி 9 சதவீதத்தால் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக, இது தொடர்பாக அமெரிக்கத்ச் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கிழக்கில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையம் திறப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates