jkr

எதிர்க்கட்சி தலைவர் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார் - ஜனாதிபதி குற்றச்சாட்டு

எமது சில தலைவர்கள் சர்வதேசத்துக்கு சென்று நாட்டை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் இருக்கின்றார்.
அவர் எதிர்க்கட்சிகளுக்கு தலைமைத்துவம் வழங்குவதில்லை. மாறாக நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்றார். பாராளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக மேற்ககொள்ளப்படுகின்ற விடயங்களை எதிர்ப்பதற்கே எதிர்க்கட்சி தலைவர் இருக்கவேண்டும். நாட்டுக்கு எதிராக செயற்படக்கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டுக்கு உதவிகள் கிடைப்பதற்கு இடமளிப்பதில்லை. உதவிகளை வழங்கவேண்டாம் என்று கூறப்படுகின்றது. நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தை வீதியில் இழுத்துப்போடுவதற்கும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் முயற்சிக்கப்படுகின்றது.
இவ்வõறான எதிர்க்கட்சி தலைவர் நாட்டுக்கு தேவையில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் வேறு நாடுகளில் அரசியலை மறந்துவிடுவார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்.
அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "எதிர்க்கட்சி தலைவர் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார் - ஜனாதிபதி குற்றச்சாட்டு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates