jkr

கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள்: பாதுகாப்பு அதிகரிப்பு


தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறு குழு ஒன்று தமது தற்கொலைதாரிகள் மற்றும் உதவியாளர்களுடன் கொழும்பு மாநகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஒளிந்திருக்கின்றது என மேற்கு மாகாண நடவடிக்கைகளுக்கு பொறுப்பான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.

இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்தே இத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

பயங்கரவாதிகள் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் செயற்படுகிறார்கள் தற்கொலைக் குண்டுதாரிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருக்கின்றது. பொலிஸாரும் இராணுவத்தினரும் பல இடங்களில் ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

படையினரின் 60 ஆவது ஆண்டு கொண்டாட்டங்களை பயங்கரவாதிகள் குழப்பும் சாத்தியம் உள்ளதால் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மே 19 ஆம் திகதி நந்திக்கடல் ஏரிப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் அவர்களின் தாக்குதல் ஒன்றுதானும் இடம்பெறவில்லை.

எனினும் மட்டக்களப்பில் சிப்பாய் ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டார். அங்கிருந்து புலிகளை விரட்டிவிடுவோம் என்றார் அவர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள்: பாதுகாப்பு அதிகரிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates