செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்குள் கொண்டு செல்லவிருந்த துப்பாக்கி ரவைகள் மீட்பு,
வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்குள் ஆட்டோவில் கொண்டு செல்லப்படவிருந்த இரண்டு துப்பாக்கி ரவைகளை படையினா இன்று மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ரி56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படுத்தக் கூடியவையே மீட்கப்பட்ட ரவைகள் என்று படையினர் குறிப்பிட்டுள்ளனர். நலன்புரி நிலையத்திற்குள் வெற்றிலை மற்றும் புகையிலை என்பவற்றைக் கொண்டுசெல்லும் ஆட்டோவொன்றில் இந்த துப்பாக்கி ரவைகள் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளன. அத்துடன் குண்டுகளுடன் இணைக்கப்பட்டிருந்த மீள்வலு சேர்க்கக்கூடிய 02 பற்றரிகளையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.








0 Response to "செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்குள் கொண்டு செல்லவிருந்த துப்பாக்கி ரவைகள் மீட்பு,"
แสดงความคิดเห็น