jkr

தெல்லிப்பளையில் நேற்று 20 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு


தெல்லிப்பளைப் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இருபது பேர் நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் படையினரால் பிடிக்கப்பட்டு, தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். இவர்களே நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களில் 12 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவர். பெண்கள் அனைவரும் ஏற்கனவே திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ரத்துருசிங்கா, 53ஆவது படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் என்.சி.ஆர்.சில்வா, கேர்ணல் கலமல்பே உட்பட மற்றும் படை அதிகாரிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தெல்லிப்பளையில் நேற்று 20 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates