jkr

பொது வேட்பாளார் சரத் பொன்சேகாவை ஆதரித்து த.தே.கூ யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம்


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளார் சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் சட்டநாதர் சங்கிலியன் தோப்பில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச் சந்திரன் தலைமையில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல வருடங்களின் பின்னர் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் யாழ், குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சொலமன் சிறில், பத்மினி சிதம்பரநாதன், திருமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ண்ச்சிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இமாம் மற்றும் தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தர் ஆகியோர் உரையாற்றினர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பொது வேட்பாளார் சரத் பொன்சேகாவை ஆதரித்து த.தே.கூ யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates