jkr

சுற்றுலாத் தளமாக மாறியுள்ள பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள வீடு


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு தென்னிலங்கை சிங்களச் சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது.

யுத்தம் தற்போது முடிவடைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஏ – 9 வீதியினூடாக அதிகளவிலான தென்னிலங்கை சிங்கள சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களினை பார்வையிடுகின்றனர். இவர்கள் பார்வையிடும் இடங்களில் ஒன்றாக தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வல்வெட்டித்துறை வீடும் மாறியுள்ளது.

உடைந்த நிலையில் உள்ள பிரபாகரனின் வீட்டிற்கு முன்னாள் நின்று இவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அத்துடன் பிரபாகரன் வீட்டு முற்ற மண் சிறிதளவை தம்முடன் எடுத்துச் செல்வதையும் காணக் கூடியதாகவிருக்கின்றது.

கடந்த சில நாட்களாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சுற்றுலாத் தளமாக மாறியுள்ள பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள வீடு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates