jkr

இன்றும் இந்தியர் ஒருவர் மீது ஆஸியில் தாக்குதல்


அவுஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரத்திலேயே 4 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று நான்காவதாக ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் இந்தியர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரஸ்பேன் நகரில் இரண்டு வெவ்வறு இடங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தெற்கு பிரிஸ்பேன் மேக்கிரகர் எனும் இடத்தில் 25 வயது இளைஞர் தாக்கப்பட்டு, அவரது பணப்பையும் பறிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சம்பவத்தில் தென்கிழக்கு பிரிஸ்பேனில் இந்திய டாக்சி டிரைவர் மீது அதில் பயணித்தவர்கள், முகத்தில் பலமுறை குத்தி மோசமாக தாக்‌கியதோடு காரையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ‌அவர்கள் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இனவெறி தாக்குதல் இல்லை : ஆஸி.பிரதமர்

இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்வதால் வருத்தப்படுவதாக நேற்று அந்நாட்டு பிரதமர் கெவின் ருட் கூறியிருந்த நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.

இது குறித்து கவலை வெளியிட்டுள்ள கெவின் ருட், இந்தியர்கள் மீதான தாக்குதல் இனவெறி தொடர்பானதல்ல என மீண்டும் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இன்றும் இந்தியர் ஒருவர் மீது ஆஸியில் தாக்குதல்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates