சிறைத் தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திஸ்ஸநாயகம் மேன்முறையீடு
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தமக்கு விதிக்கப்பட்ட இருபது ஆண்டு கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி உயர் நீதிமன்றம் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் இன முறுகலை ஏற்படுத்தும் பிரசாரங்களை ஊடகங்களில் பிரசுரித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.எனினும் தமக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி, திஸ்ஸநாயகம் தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.








0 Response to "சிறைத் தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திஸ்ஸநாயகம் மேன்முறையீடு"
แสดงความคิดเห็น