jkr

இந்தியா இணங்கினால் பிரபாகரனின் தாயார் இந்தியாவிற்குப் போக முடியும்- ஜனாதிபதி!


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரும் மாமியாரும் (மனைவியின் தாயார்)விரும்பினால் இந்தியாவிற்குச் செல்ல முடியும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியா இணங்கினால் அவர்கள் இந்தியாவிற்குப் போக முடியும் என்று வெளிநாட்டு நிருபர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பிரபாகரனின் தாயார் பார்வதிபிள்ளையும் மாமியார் திருமதி ஏரம்புவும் தமது எதிர்காலம் தொடர்பான திட்டம் எதனையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆயினும் பிரபாகரனின் தாயாரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பிரபாகரனின் உறவினரான இராஜேந்திரன் இலங்கை அரசாங்கத்தைக் கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

மரணமடைந்த பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு மரியாதையுடன் இறுதிக்கிரியை இடம்பெற்றுள்ளதாக ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்தவார முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இறுதிக்கிரியையின் போது பார்வதியும் திருமதி ஏரம்புவும் சமுகமளித்திருந்ததாகவும் 300 இற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாகவும் தமக்குக் கூறப்பட்டதாக ஜனாதிபதி கூறியதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இந்தியா இணங்கினால் பிரபாகரனின் தாயார் இந்தியாவிற்குப் போக முடியும்- ஜனாதிபதி!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates