ஜனாதிபதி மகிந்தவின் வருகையை ஒட்டி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜனாதிபதி மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கான இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருவதையொட்டி யாழ் நகரை அண்டிய பகுதிகளில் படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்த பாதுகாப்பு வளையங்கள் நேற்று சனிக்கிழமை காலை முதல் நிறுவப்பட்டுள்ளன.
யாழ் பேரூந்து நிலையத்தினை அண்டியுள்ள பகுதிகளில் சாதாரண உடையணிந்த படைப்புலனாய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை இவர்களின் நடமாட்டம் மூலம் அறிய முடிந்துள்ளது.
ஒரு சிலர் நீண்ட நேரமாக பேரூந்து நிலையத்தினுள் காணப்பட்டதுடன் வேறு சிலர் பேருந்துகளின் ஏறி சிறிது தூரம் சென்ற பின்னர் இறங்கி மீண்டும் பேரூந்து நிலையத்தினுள் தங்கிக் கொண்டமை இதை தெளிவுபடுத்தியுள்ளது.
இதேநேரம் தமிழ் மக்களின் புனித தலமான நல்லூர் ஆலயத்தினை அண்டியுள்ள பகுதியில் நேற்று மாலையின் பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு படையினரின் நடமாட்டம் அதிகமாக உள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது.
0 Response to "ஜனாதிபதி மகிந்தவின் வருகையை ஒட்டி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு"
แสดงความคิดเห็น