jkr

அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் முக்கியஸ்தர்கள் அஞ்சலி!


2அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் முக்கியஸ்தர்கள் அஞ்சலி- புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வெட்டித்துறையில் இன்றுகாலை 10.30அளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அவருடைய மகளுடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வுகளின்போது இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனும் இரங்கல் உரையினை நிகழ்த்தினார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர். இறுதி நிகழ்வுகளைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3.00 மணியளவில் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

21
51


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் முக்கியஸ்தர்கள் அஞ்சலி!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates