நானும் செல்வாவும்... போட்டு தாக்கும் ரீமாசென்
எதிரும் புதிரும், சண்டக்கோழி இப்படி என்ன டைட்டில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ரீமாசென்-செல்வராகவன் பிரண்ட்ஷிப்புக்கு!
அப்படி ஒரு 'படார் திடீர்' பாசம் இருக்கிறது இருவருக்குள்ளும். ஒரு நாள் பேசாவிட்டாலும் எதையோ இழந்தது போலாகிவிடுவாராம் ரீமாசென்.
"எங்க ரெண்டு பேருக்குள்ளே ஆயிரம் சண்டை வந்தாலும் அவர்தான் என் பிரண்ட். என்னுடைய பாசிட்டிவ், நெகட்டிவ் எல்லாம் தெரிஞ்சவர் அவர்தான்" என்று கூறியிருக்கிறார் ரீமா. (ஹ¨ம், அப்படி போவுதா ரூட்?) இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக ஆன்ட்ரியா நடித்திருக்கிறார். இருவரில் யாருக்கு முக்கியத்துவம் என்ற கேள்வியை ரீமாவிடம் கேட்டால், "படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஆனால் நான் இந்த படத்தில் செகண்ட் ஹீரோயின் அல்ல" என்கிறார்.
தமிழ்ல இவருக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 'கல்யாணம்'. "அப்படி என்ன வயசாயிடுச்சு?" என்று கேட்டலாவது எதையாவது சொல்லி சமாளிக்கலாம். ஆனால், "கல்யாணத்தை பற்றி நான் சிந்தித்ததே இல்லை" என்றால் என்ன செய்வதாம்? காதல், கல்யாணம், இதுக்கெல்லாம் இந்த வருஷத்தில் இடமும் இல்லை. நேரமும் இல்லை என்கிறார் ஒரே போடாக!
இன்னும் ஆட்டம் போட வேண்டியது எவ்வளவோ இருக்கே?
0 Response to "நானும் செல்வாவும்... போட்டு தாக்கும் ரீமாசென்"
แสดงความคิดเห็น