அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் செல்வபுரம் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
வலிகாமம் கிழக்கு செல்வபுரம் கிராம மக்களின் அழைப்பினை ஏற்று அப்பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் மேற்கொண்டார்.
இன்று மாலை அங்கு சென்றடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை செல்வபுரம் கிராம மக்கள் அன்புடன் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது. செல்வபுரம் கிராம ஒன்றியத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் வலிகாமம் கிழக்கு ஈபிடிபி பொறுப்பாளர் தர்மராசா ஏற்புரை நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்புரையாற்றினார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தீர்க்கமாக சிந்தித்து சரியான அரசியல் தலைமையை தெரிவு செய்வதுடன் இழந்து போன அனைத்தையும் கட்டியெழுப்ப ஒரணியில் திரள வேண்டுமென அச்சமயம் அவர் கேட்டுக்கொண்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த கால அழிவு யுத்தம் எமது வளங்களை அழித்தது மட்டுமல்லாது எமது உறவுகளை கொன்றொழித்துள்ளதுடன் இறுதியில் எமது மக்களை அநாதரவான நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது. அத்தகைய கொடூர அழிவு யுத்தம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதனை அடுத்து சுதந்திரமான சூழ்நிலை தற்போது தோற்றுவிக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களும் தற்போதய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருவதனையும் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தீர்க்கமாக சிந்தித்து சரியான அரசியல் தலைமைத்துவத்தினை தெரிவு செய்வதன் ஊடாக எமது கோரிக்கைள் பலவும் நிறைவேற்றப்படுமென்பதையும் தெளிவுபடுத்தினார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதின் மூலம் தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்னும் நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.
பெரும்பாலும் விவசாய மற்றும் விவசாயம் சார் கூலித்தொழிலில் ஈடுபட்டுவரும் செல்வபுரம் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பயிரிடப்படாத அனைத்து நிலங்களிலும் விவசாயம் மேற்கொள்ளும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய செல்வபுரம் கிராம மக்களும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனத்தெரிவித்தார். மேலும் விவசாயம் சார்ந்த அனைத்து உதவிகளும் அக்கிராம மக்களுக்கு பெற்றுக்கொடுக்க தாம் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயலாளர் தயானந்தா ஈபிடிபியின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரன் ஆகியோரும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை அங்கு சென்றடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை செல்வபுரம் கிராம மக்கள் அன்புடன் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது. செல்வபுரம் கிராம ஒன்றியத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் வலிகாமம் கிழக்கு ஈபிடிபி பொறுப்பாளர் தர்மராசா ஏற்புரை நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்புரையாற்றினார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தீர்க்கமாக சிந்தித்து சரியான அரசியல் தலைமையை தெரிவு செய்வதுடன் இழந்து போன அனைத்தையும் கட்டியெழுப்ப ஒரணியில் திரள வேண்டுமென அச்சமயம் அவர் கேட்டுக்கொண்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த கால அழிவு யுத்தம் எமது வளங்களை அழித்தது மட்டுமல்லாது எமது உறவுகளை கொன்றொழித்துள்ளதுடன் இறுதியில் எமது மக்களை அநாதரவான நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது. அத்தகைய கொடூர அழிவு யுத்தம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதனை அடுத்து சுதந்திரமான சூழ்நிலை தற்போது தோற்றுவிக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களும் தற்போதய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருவதனையும் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தீர்க்கமாக சிந்தித்து சரியான அரசியல் தலைமைத்துவத்தினை தெரிவு செய்வதன் ஊடாக எமது கோரிக்கைள் பலவும் நிறைவேற்றப்படுமென்பதையும் தெளிவுபடுத்தினார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதின் மூலம் தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்னும் நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.
பெரும்பாலும் விவசாய மற்றும் விவசாயம் சார் கூலித்தொழிலில் ஈடுபட்டுவரும் செல்வபுரம் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பயிரிடப்படாத அனைத்து நிலங்களிலும் விவசாயம் மேற்கொள்ளும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய செல்வபுரம் கிராம மக்களும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனத்தெரிவித்தார். மேலும் விவசாயம் சார்ந்த அனைத்து உதவிகளும் அக்கிராம மக்களுக்கு பெற்றுக்கொடுக்க தாம் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயலாளர் தயானந்தா ஈபிடிபியின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரன் ஆகியோரும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Response to "அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் செல்வபுரம் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டார்."
แสดงความคิดเห็น