மலேசியாவில் இன்றும் இரு தேவாலயங்களை சேதமாக்க முயற்சி
மலேசியாவில் முஸ்லிம்கள் அல்லாதவர்களால் அல்லா என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றமை தொடர்பான குழப்பங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில், இன்று அங்கு ஆறாவது கிறிஸ்த தேவாலயத்துக்கும் தீ வைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸார் சார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் இம்முயற்சியால் எவ்வித பாரிய அளவு சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெராக் மாநிலத்திலுள்ள ரய்பிங் என்னுமிடத்தில் உள்ள ஆல் செய்ன்ற் தேவாலயத்தின் மீது இத்தாக்குதல் இன்று காலை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை ஆராதனைகள் இடம்பெறுவதற்கு முன்னர் தேவாலயத்தினுள் இருந்து மண்ணெண்ணை நிரம்பிய போத்தல் ஒன்றை தேவாலய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அத்துடன் ஆலயத்தின் உட்புற சுவர்களில் கறுப்பு நிற புள்ளிகள் காணப்படுவதாகவும், சிறிய அளவு தீ வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சந்தேகிப்பதாகவும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி சுல்கிபிலி அப்துல் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சென் லூயிஸ் கத்தோலிக்க தேவாலயத்தினுள் இருந்தும் மண்ணெணையுடன் போத்தல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றுக் காலை குட் ஷெப்பர்ட் லுத்தரன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தலைநகர் கோலாலம்பூரை அண்டிய பகுதிகளில் மூன்று தேவாலயங்கள் நேற்று முன் தினம் தாக்கப்பட்டுள்ளன.
கத்தோலிக்க செய்திப் பத்திரிகை தமது கிறிஸ்தவ கடவுளைக் குறிக்க அல்லா என்ற வார்த்தையைப் பிரயோகிக்க முடியும் என்று கடந்த மாதம் நீதிமன்ற தீர்ப்பொன்று வெளியானது முதல் மலேசியாவில் மதங்களுக்கிடையிலான குழப்பங்கள் தீவிரமடைந்துள்ளன.
0 Response to "மலேசியாவில் இன்றும் இரு தேவாலயங்களை சேதமாக்க முயற்சி"
แสดงความคิดเห็น