jkr

அதிகரித்து வரும் ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் : கஃபே கவலை


ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் கவலையளிக்கக்கூடிய வன்முறை இடம்பெற்று வருவதாகத் தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் கண்காணிப்பாளர்கள் இதனை அறிவித்துக்கொண்டிருக்கும்போதே, வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே மத்திய இலங்கையில் மோதல்கள் நடந்துள்ளன.

எதிர்க்கட்சியின் பெண் ஆதரவாளர் ஒருவர் செவ்வாயன்று சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். தேர்தல் வன்முறைகள் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கஃபே கூறுகிறது.

பிபிசி செய்தியாளர் மீது தாக்குதல்

இலங்கையின் கிழக்கே பொலன்னறுவை நகரில் பணிபுரியும் பிபிசி சிங்கள சேவையின் பெண் செய்தியாளர் தக்ஷிலா தில்ருக்ஷி ஜெயசேனா, தேர்தல் பிரசாரக் மோதல் பற்றி செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும்போது ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.

இந்தச் சம்பவம் குறித்து செய்தி சேகரித்துவிட்டு வெளியேறும் போது, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் என்று கூறப்படும் சிலரால் தஷிலா தாக்கப்பட்டு, அவரது செய்தி சேகரிக்கும் கருவி மற்றும் அவர் அணிந்திருந்த நகைகள் பிடுங்கப்பட்டதாக பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அதிகரித்து வரும் ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் : கஃபே கவலை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates