jkr

மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து, இந்திய விஞ்ஞானிகள் சாதனை!


ஒவ்வொரு மனிதனின் குணாதிசயம்இ செயற்பாடுகள் திறமை, நிறம், தோற்றம், நோய் உள்ளிட்டவற்றுக்கு அவனது மரபணுக்களே காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் மரபணுவுக்கும் அவனது தந்தையின் மரபணுவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

தந்தையின் மரபணு பட்டியலில் ஏதாவது ஓரிடத்தில் நோய் இருந்தால் அவரது மகனுக்கும் அந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது. மரபணுப் பட்டியல் இருந்தால் மகனுக்கு முன்கூட்டியே மருந்து கொடுத்து அந்த நோயை தடுத்து விடமுடியும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மரபணு பட்டியலைத் தயாரிப்பது மிகவும் கடினம். இருப்பினும் அமெரிக்காஇ பிரிட்டன்இ கனடாஇ கொரியாஇ சீனா உட்பட 14 நாடுகள் தனித்தனியாக இப்பட்டியலைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளன.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்ஸிலைத் (சி.எஸ்.ஐ.ஆர்) சேர்ந்த மரபணு விஞ்ஞானிகள்இ மரபணுப் பட்டியலைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினர்.

9 வார தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

இத்தகவலை சி. எஸ். ஐ. ஆர். தலைவர் சமீர் பிரம்மசாரி டில்லியில் தெரிவித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து, இந்திய விஞ்ஞானிகள் சாதனை!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates