சம்பந்தன் - ஜனாதிபதி நேற்றிரவு அலரி மாளிகையில் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் நேற்றிரவு அலரி மாளிகையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறும் வகையில் இதற்கான அழைப்பு ஜனாதிபதியினால் விடுக்கப்படடிருந்ததாக தெரிய வருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு மட்டும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் அவருடன் சென்றிருந்தார்.
குறிப்பாக இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு அதரவு வழங்குமாறு கோரியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாட்டை அக்கட்சியைச் சார்ந்தவர்கள் எடுத்துக் கூறியதாகவும் தெரியவருகின்றது.
0 Response to "சம்பந்தன் - ஜனாதிபதி நேற்றிரவு அலரி மாளிகையில் சந்திப்பு"
แสดงความคิดเห็น