jkr

இனிமேலும் மோசமான சம்பவங்களை வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ள ஒரு போதும் அனுமதிக்கப்படமாட்டார்கள் - புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி


வடக்கு முஸ்லிம்களின் வரலாற்றில் இடம்பெற்ற மோசமான சம்பவங்கள் இனிமேலும் நடப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மாநாடு புத்தளம் ஆலங்குடாவில் நேற்று நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இன்று பயங்கரவாத நிலை முற்றாக நீங்கியுள்ளதால் அதுபற்றிய எவ்வித அச்சமும் இன்றி தத்தமது சொந்தக் காணிகளில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் மீள்குடியேறி தமது இயல்வு வாழ்வைத் தொடரமுடியுமென தெரிவித்தார்.

உங்கள் பிறந்த மண்ணில் நிச்சயம் நீங்கள் குடியமர்த்தப்படுவீர்கள் எனத் தெரிவித்த ஜனாதிபதி உங்கள் மீள் குடியேற்றம் நடைபெறும் காலப் வெகுதூரத்தில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

வேறு எவரும் உங்கள் காணிகளில் குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். அங்கு நீங்கள் தைரியமாகச் சென்று குடியேற வேண்டும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நிச்சயமாக செய்வோம் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

வடக்கிலிருந்து 1990 களில் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் கடந்த 20 வருடங்களாக புத்தளம் மற்றும் பல்வேறு இடங்களிலும் பல சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற ஏற்பாடு செய்து தருமாறு அவ்வப்போது பதவியிலிருந்த அரசதரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இனிமேலும் மோசமான சம்பவங்களை வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ள ஒரு போதும் அனுமதிக்கப்படமாட்டார்கள் - புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates