jkr

பற்றி எரிகிறது தெலங்கானா! 33 எம்எல்ஏ; 4 எம்பிக்கள் ராஜினாமா


தனி தெலங்கானா கோரி 48 மணி நேர பந்த் நள்ளிரவு தொடங்கியது. இதனால் போராட்டம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ், நடிகை விஜயசாந்தி உட்பட 4 எம்பிக்கள் ராஜினாமா செய்தனர். இதுதவிர டிஆர்ஸ், காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்யம் கட்சிகளை சேர்ந்த 33 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். பல இடங்களில் பஸ்கள், அரசு அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டன. தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
தனி தெலங்கானா மாநிலம் குறித்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 2வது முறையாக நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தெலங்கானா மாநிலம் அமைய எந்தக் காலக்கெடுவும் இல்லை என்றதுடன் மத்திய அரசு உறுதியான முடிவை வெளியிடவில்லை.

இதுகுறித்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கருத்து கூறுகையில் ‘மத்திய காங்கிரஸ் அரசு நம்பிக்கை துரோ கம் செய்துவிட்டது. தெலங்கானா தனி மாநிலம் அமைய காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை. மீண்டும் அனைத்து கட்சிகளுடன் விவாதம் நடத்திய பின்னரே தெலங்கானா மாநிலம் அமைவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. இந்த அறிக்கையானது சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே இலையை பிடுங்கிக் கொண்டது போலாகும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து தெலங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி வீட்டில் காங்., டிஆர்எஸ் பிரஜா ராஜ்யம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுடன் சந்திரசேகர ராவ் இரவு 11 மணி வரை ஆலோசனை நடத்தினார்.
இதில் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து தெலங் கானா மாவட்டங்களில் 48 மணி நேர பந்த் நடத்த சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்தார்.
இந்த பிரச்னையில் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கட்சி பாகுபாடின்றி வார்டு கவுன்சிலர்கள் முதல் எம்எல்ஏக்கள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள், எம்பிக்கள் வரை அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதன்படி முதலாவதாக சந்திர சேகரராவ் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நடிகை விஜயசாந்தி, ரமேஷ் ராத்தோடு, பிரபாகர் ஆகிய எம்பிக்களும் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து டிஆர்எஸ்., காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி களை சேர்ந்த 33 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர்.

இதுதவிர எம்எல்சிக்கள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தவண்ணம் உள்ளனர்.
இதனிடையே 48 மணி நேர பந்த் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் இரட்டை நகரங்களான ஐதராபாத், செகந்திரபாத் மற்றும் வாரங்கல், கம்மம், கரீம் நகர், அடிலாபாத், மேதக், நிஜாமாபாத், நலகொண்டா உள்ளிட்ட 9 தெலங்கானா மாவட்டங்களில் அரசு பஸ்கள், தனியார் பஸ் போக்குவரத்து நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டது. இன்று காலை வரை 10க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் 150 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. தெலங்கானா மாவட்டங்களில் வரும் ஜனவரி 1ம் தேதி வரை 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இருப்பினும் மாணவர் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர். ஆசிரியர்கள் கூட்ட மைப்பினர், தொழிலாளர்கள், வக்கீல்கள் சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா மாவட்டங்களில் ரயில் மறியல், கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல் போராட்டங்களும் நடந்து வருகிறது. தலைநகர் ஐதராபாத் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவு டிஆர்எஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் ராம்மோகன், மாநில பொதுச் செயலாளர் பிரபாகர் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக கைது செய்யப்பட் டனர்.

இதை கண்டித்து தெலங்கானா பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறை கலவரங்களில் குதித்துள்ளனர். வாரங்கல்லில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. விஜயவாடா & ஐதராபாத் சாலையில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத் ஐகோர்ட் உட்பட தெலங்கானா பகுதிகளில் உள்ள அனைத்து கோர்ட்களையும் வக்கீல்கள் புறக்கணித்துள்ளனர். வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் இன்று நடப்பதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. ஆட்டோக்கள் கூட ஓடாததால் பயணிகள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். வங்கிகள், பெட் ரோல் பங்குகளும் மூடிக் கிடக்கிறது. மகபூப் நகர் தாலுகா அலுவலகத்திற்கு இன்று காலை வன்முறையாளர்கள் தீ வைத்தனர். சித்திப்பேட்டை அருகே மச்சாவூர் என்ற இடத்தில் அரசு பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தொடர்ந்து தெலங்கானா பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பற்றி எரிகிறது தெலங்கானா! 33 எம்எல்ஏ; 4 எம்பிக்கள் ராஜினாமா"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates