jkr

சிரச தொலைக்காட்சி பேட்டியில் அவமதிப்பு: சரத் பொன்சேகாவிடம் 500 மில். ரூபா நஷ்டஈடு கோருகிறார் கரன்னாகொட


ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாள ருமான வசந்த கரன்னாகொட தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தனக்கு அபத்தமாகவும், அபகீர்த்தி ஏற்படும் வகையில் பொதுமக்களின் பார்வையில் தனக்கு அவமதிப்பு ஏற்படும் வகையிலும் சரத் பொன்சேகா சிரச தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தமைக் காகவே அவர் இவ்வாறு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

தனது சட்டத்தரணி அத்துல டி சில்வா மூலம் குறிப்பிட்ட பணம் 14 நாட்களுக்குள் செலுத்தப்பட தவறினால் 500 மில்லியன் ரூபாவை வசூலிக்க சட்ட நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்று அந்த கோரிக்கைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் கடற் படைத் தளபதியின் அறிவித்தலின் பேரில் தனது கட்சிக்காரருக்கு மேற்படி பேட்டியில் கூறப்பட்ட பிதற்றல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்ட தாகவும் தனது கட்சிக்காரரின் கண்ணியம் நற்பெயர் மற்றும் பொது மக்களிடையிலான மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் மீளப்பெற முடியாத அளவுக்கான பாதிப்பையும் தோற்றுவித் துள்ளது என்று முன்னாள் கடற்படை தளபதியின் சட்டத்தரணி அக்கடிதத்தில் குறிப்பிட்டு ள்ளார்.

அவையாவன:

அ) எனது கட்சிக்காரர் தனது பதவியை 48 மணி நேரத்தில் துறக்குமாறு கேட்கப்பட்ட போது அவர் உண்மையிலேயே சிறுபிள்ளை போல அழுதார்.

ஆ) எனது கட்சிக்காரரை 48 மணி நேரத்தில் வெளியேறுமாறு கேட்கப்பட்ட போது அவர் அழுதார்.

இ) எனது கட்சிக்காரருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றைப் பற்றி குறிப்பிடும் பொய்யான கடிதமொன்றை ஜனாதிபதி வழங்கிய போது அவர் அதனை இரு கைகளையும் நீட்டாமல் கூட ஒரே கையை நீட்டி வாங்கிக் கொண்டார்.

ஈ) ஜனாதிபதி கோபமடைந்து எனது கட்சிக்காரருக்கு சத்தம் போட்டு திட்டினார். (ஜனாதிபதி தனக்கு அநீதி இழைத்து விட்டதாக அவர் கூறிய போது) எனது கட்சிக்காரர் அழுதபோது பாதுகாப்புச் செயலாளர் அவரை ஜனாதிபதி செயலகத்தில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்று திட்டினார்.

உ) அதற்கு மாறாக தன்னை இராணுவத் தளபதி பதவியை துறக்குமாறு கேட்கப்பட்ட போது தான் அழவில்லை. அத்துடன், அவ்வாறான கெளரவ குறைச்சல்களுக்கு தான் முகங்கொடுக்க நேர்ந்திருந்தால் அரச சேவையில் தொடர்ந்து இருந்திருக்கப் போவதில்லை. கடற்படைத் தளபதிக்கு இவ்வாறு அதிகாரத்தின் முன்னிலையில் அழுது வடிவது ஏற்றதல்ல (அப்போது அவர் கடற்படை தளபதியாக இருந்தார்)

ஊ) தனது கட்சிக்காரர் எந்த சுயமரியாதையும் அற்ற கேவலமிக்க ஒருவர் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு காட்டுவதாகவும் பொது வாழ்க்கையில் உயர்ந்த பொறுப்பினை வகிக்க தகுதியில்லா தவர் என்ற வகையிலும் அமைகிறது.

எ) எனது கட்சிக்காரர் பொதுமக்களிடையே பெற்றுள்ள உயர் மதிப்பினை பாதிக்கும் வகையில் அந்த பிதற்றல்கள் அமைந்துள்ளன.

உம்மால் விடுவிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட கூற்று தவறானதும் மற்றும் உங்கள் அறிவுக்கேற்ப தவறானதுமாகும். அது எனது கட்சிக்காரரின் பெயரைக் கெடுப்பதாக உள்ளது என்று கூறுமாறு தனது கட்சிக்காரரால் அறிவுறுத்தப்பட்டதாகவும் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

துரிதமாக மறைந்து வரும் உங்கள் பொதுமக்களிடையிலான மதிப்பினை தூக்கி நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பொய்யான திட்டமிட்ட, பொறாமை மிகுந்த முயற்சி இது. உம்மையும் எனது கட்சிக்காரரையும் பொய்யாக ஒப்பிடுவதன் மூலம் எனது கட்சிக்காரர் மீதான தனிப்பட்ட விரோதத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. மேற்கூறிய குறிப்புகள் எனது கட்சிக்காரரின் பொதுமக்களி டையிலான மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் விஷமமான பழிவாங்கும் முயற்சியாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சிரச தொலைக்காட்சி பேட்டியில் அவமதிப்பு: சரத் பொன்சேகாவிடம் 500 மில். ரூபா நஷ்டஈடு கோருகிறார் கரன்னாகொட"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates