jkr

அமில தேரரை விடுவிக்கக் கோரி சத்தியாக்கிரகம்


நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரரை உடனடியான விடுவிக்கக் கோரி இன்று பிற்பகல் கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று நடைபெற்றது.

கொழும்பு புறக்கோட்டை அரச மரச் சந்தியிலுள்ள விகாரைக்கு முன்பாக ஆரம்பமான சத்தியாக்கிரக போராட்டம் மாலைவரை தொடர்ந்தது.

தேசிய பிக்கு முன்னணியைச் சேர்ந்த பிக்குமார் பலரும் பொதுமக்களும் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் அமில தேரருக்கு ஆதரவாக கலந்துகொண்டிருந்தனர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக போராடிய தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அமில தேரரை விடுவிக்கக் கோரி சத்தியாக்கிரகம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates