சங்கரன்கோவில்: வீட்டில் பெண் கொலை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே வீ்ட்டில் தனியாக இருந்த பெண் குத்திக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் நகைக்காக கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் பரமசிவன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். குழந்தைகள் இல்லாததால் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் மாரியம்மாளின் வீட்டு கதவு திறக்காததால் அருகிலுள்ள அவரது தம்பி கருப்பசாமியின் மனைவி ஜெயலட்சுமி அங்கு சென்று பார்த்தார்.
அப்போது வீட்டின் கதவு லேசாக திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மாரியம்மாள் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் கத்து குத்து இருந்தது.
அவர் அணிந்திருந்த 10 பவுன் செயின், 7 பவுன் செயின், 3 பவுன் எடையுள்ள இரண்டு மோதிரங்கள், மாயமாகியிருந்தது. மேலும் காது அறுக்கப்பட்டு கம்மல் மாயமாகி இருந்தது. 20 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2.5 லட்சம்.
தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
0 Response to "சங்கரன்கோவில்: வீட்டில் பெண் கொலை"
แสดงความคิดเห็น