jkr

யாழில் இருந்து கொழும்பு வந்த குருக்கள் குடும்பம் இனந்தெரியாத நபர்களினால் கடத்தல்



யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்த 45 வயதான 38 வயதான சைவக்குருக்கள் அவரது மனைவி மற்றும் ஐந்து வயது பிள்ளை ஆகியோர் இனந்தெரியாதவர்களாhல் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெற்றதாக இன்று யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை சைவக்குருக்களின் பெற்றோர் செய்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் இருந்து புகையிரதம் மூலம் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு வந்து வெளியில் வரும் போதே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதேவேளை இந்த சைவக்குருக்களின் இரண்டு பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழில் இருந்து கொழும்பு வந்த குருக்கள் குடும்பம் இனந்தெரியாத நபர்களினால் கடத்தல்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates