யாழ். மாநகரசபை முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாநகரசபையினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா இன்றையதினம் நல்லூர் நாவலர் கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு குழந்தைகளின் கலைவிழாவை சிறப்பித்தார். நாவலர் கலாச்சார மண்டபத்திற்கு இன்று மாலை வருகைதந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டதுடன் குழந்தைகளினால் மாலைகளும் சூடப்பட்டன.
கலைவிழாவினை ஆரம்பிக்குமுகமாக மங்கல விளக்கேற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதனைத்தொடர்ந்து ஆறுமுகநாவலரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியமை விசேட அம்சமாகும். தொடர்ந்து இடம்பெற்ற கலைநிகழ்சிகளில் முன்பள்ளிக்குழந்தைகளின் பல்வேறு கலைநிகழச்சிகள் வெகுசிறப்பாக இடம்பெற்றன. இன்றைய நிகழ்வுகளில் யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ யாழ். மாநகரசபை ஆணையாளர் மு.சரவணபவ யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் குழந்தைகள் என பெருந்தொகையானோர் பங்குகொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு குழந்தைகளின் கலைவிழாவை சிறப்பித்தார். நாவலர் கலாச்சார மண்டபத்திற்கு இன்று மாலை வருகைதந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டதுடன் குழந்தைகளினால் மாலைகளும் சூடப்பட்டன.
கலைவிழாவினை ஆரம்பிக்குமுகமாக மங்கல விளக்கேற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதனைத்தொடர்ந்து ஆறுமுகநாவலரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியமை விசேட அம்சமாகும். தொடர்ந்து இடம்பெற்ற கலைநிகழ்சிகளில் முன்பள்ளிக்குழந்தைகளின் பல்வேறு கலைநிகழச்சிகள் வெகுசிறப்பாக இடம்பெற்றன. இன்றைய நிகழ்வுகளில் யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ யாழ். மாநகரசபை ஆணையாளர் மு.சரவணபவ யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் குழந்தைகள் என பெருந்தொகையானோர் பங்குகொண்டனர்.
0 Response to "யாழ். மாநகரசபை முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா சிறப்பாக இடம்பெற்றது."
แสดงความคิดเห็น