jkr

பொரஸ்ட கிறீக் தோட்டத்தில் கொள்ளையிட முயன்ற சந்தேகநபர் பொதுமக்களிடம் பிடிபட்டார்


தலவாக்கலை பொரஸ்ட கிறீக் தோட்டத்தில் நேற்று நள்ளிரவு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முற்பட்ட ஒருவரை அத்தோட்டத்து மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

3 பேரடங்கிய கொள்ளையர்கள் நேற்று நள்ளிரவு அத்தோட்டத்தில் நுழைந்துள்ளனர். இதனையடுத்து அத்தோட்டத்து மக்கள் சுற்றி வளைத்து கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட சமயம் இருவர் தப்பிச் சென்றுள்ள அதேவேளை ஒருவர் பிடிபட்டுள்ளார்.

இவரை அம்மக்கள் திம்புல்ல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து பொதுமக்களிடம் பிடிபட்ட சந்தேகநபர் தலவாக்கலையைச் சேர்ந்தவர் என்றும், கடந்த ஒரு மாதத்தில் தலவாக்கலையில் இடம்பெற்ற 3 கொள்ளைச் சம்பவங்களுடன் இவர் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பொரஸ்ட கிறீக் தோட்டத்தில் கொள்ளையிட முயன்ற சந்தேகநபர் பொதுமக்களிடம் பிடிபட்டார்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates