jkr

திஸ்ஸநாயகம் மேன்முறையீடு - சட்டமா அதிபருக்கு அழைப்பாணை


பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக இருபது வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் ஜே. எஸ் திஸ்ஸநாயகத்திற்குப் பிணை பெறும் பொருட்டுத் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிபதிகளான சிசிர டி ஆப்றூ மற்றும் உப்பாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
சட்டமா அதிபரை எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தே இந்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "திஸ்ஸநாயகம் மேன்முறையீடு - சட்டமா அதிபருக்கு அழைப்பாணை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates