jkr

ஈ.பி.டி.பி,யின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா?- ஜே.வி.பி. கேள்வி; தெளிவுபடுத்துமாறும் கோரிக்கை


அதிகாரத்தின் மேலுள்ள பேராசையினாலும் ஜனாதிபதிப் பதவிக்காகவும் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவ வீரர்கள் பெற்றுக்கொண்ட வெற்றியினை அரசாங்கம் காட்டிக்கொடுக்க முனைகின்றது என்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஒற்றுமையில்லை எனக்கூறும் அரசாங்கத்தின் கூட்டமைப்பில் பிணக்குகளே காணப்படுகின்ன. ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க ஈ.பி.டி.பி. விதித்துள்ள நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா? இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்ற போதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியினை அரசாங்கம் தற்போதுதானாகவே முன் வந்து ஏற்றுக்கொண்டுள்ளது. எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவரல்லர். பல்வேறு நோக்கங்களைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தற்போதைய பிரச்சினையாகவும், நாட்டுக்கு சவாலாகவும் காணப்படும் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்தல் மற்றும் ஜனநாயகத்தை ஸ்தாபித்தல், நல்லாட்சியை ஏற்படுத்தல் போன்ற காரணிகளுக்காக எதிரணிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

எதிரணியின் பொது வேட்பாளர், பதவிக்கு வந்தவுடன் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுøறப்படுதி சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பார். பின்பு பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் செல்வார். இந்த தேர்தலில் குறிப்பாக அரச ஊடகங்கள் பக்கச் சார்பற்ற முறையில் செயற்படும். பொலிஸாரும் அவ்வாறே செயற்படுவர்.

இதன் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கமே நாட்டைக்கொண்டு நடத்துவதோடு, நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதியாக எதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா பதவி வகிப்பார்.

எதிரணியின் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாத அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களைச் செய்துவருகின்றது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று கூறும் அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவிற்கும் இடையில் கொள்கை ரீதியாக ஒற்றுமை உள்ளதா?

ஈ.பி.டி.பி. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பத்து நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனை ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அந்த பத்து நிபந்தனைகளில் முதலாவதாக 13ஆவது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து அதற்கு அப்பால் சென்று தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பத்தாவதாக தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களில் சுயாட்சிக் கொள்கையை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா என்பதனை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஜனாதிபதிப் பதவி மீதுள்ள பேராசையினால் தேசிய பாதுகாப்பு, இன ஒற்றுøம, இறையாண்மை போன்றவற்றுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஈ.பி.டி.பி,யின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா?- ஜே.வி.பி. கேள்வி; தெளிவுபடுத்துமாறும் கோரிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates