எவரெஸ்ட் சிகரத்தில் நேபாள அமைச்சரவைக் கூட்டம்

புவி வெப்பமாதல் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் எதிர்காலத்தில் தம்மை தயார்படுத்திக்கொள்வதற்காக நேபாள நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் இன்று எவரெஸ்ட் சிகரத்தில் நடைபெற்றது.
உலகத்தில் மிக உயரமான இடத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் என்ற பெருமையை இந்தக் கூட்டம் பெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் ஒக்சிஜன் நிரப்பப்பட்ட வாயுதாங்கிகளுடன் அங்கு சென்றிருந்தனர். மிகவும் குளிரான காலநிலையில் (17192 அடி உயரத்தில்) பனிநிறைந்த சிகரத்தில் இடம்பெற்ற இக்கூட்டம் சுவாரஸ்ய நிகழ்வாக உலகத்தவர்களால் பார்க்கப்படுகிறது.
அந்நாட்டின் பிரதமர், அவருக்கு அடுத்த அந்தஸ்துப் பதவி வகிப்பவர் ஆகிய இருவருடன் 20 அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, மாலைதீவுகளின் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.







0 Response to "எவரெஸ்ட் சிகரத்தில் நேபாள அமைச்சரவைக் கூட்டம்"
แสดงความคิดเห็น