jkr

ஜெனரல் சரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை : விமல் வீரவன்ச தெரிவிப்பு


பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார்.

தமது அமைச்சில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு விமல் வீரவன்ச மேலும் கூறுகையில்,

"நேற்று வெளியாகிய ஆங்கில வார இதழ் ஒன்றில் ஜெனரல் சரத் பொன்சேகா ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளை பாதுகாப்புச் செயலாளர் மீது சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்க உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துறையாடப்பட்டு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

40 வருடங்களுக்கும் மேலாக பாதுகாப்புப் படையில் சேவை புரிந்துள்ள அவர், இராணுவ சம்பிரதாயங்களை மீறிச் செயற்பட்டு வருகிறார் என்றும் அவர் குற்றஞ்சுமத்தினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஜெனரல் சரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை : விமல் வீரவன்ச தெரிவிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates