மகேஸ்வரி அறக்கட்டளை நிதிய பணிமனை இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் தத்துவத்திற்கேற்ப மக்கள் பணிக்காக ஆரம்பிக்கப்பட்ட மகேஸ்வரி அறக்கட்டளை நிதியத்தின் வடமாகாண பணிமனை இன்றையதினம் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சரும் ஈபிடிபி செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றுகாலை யாழ். நகர் நான்காம் குறுக்குத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மகேஸ்வரி அறக்கட்டளை நிதியத்தின் வடமாகாண பணிமனைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக அப்பணிமனையினைத் திறந்து வைத்தார். பெருமளவு அன்பர்கள் நல்லுள்ளங்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டிருந்த நிலையில் பணிமனையினை நாடா வெட்டி திறந்து வைத்த அமைச்சர் தேவானந்தா அவர்கள் தொடர்ந்து மங்களகரமான நிகழ்வினை முன்னிட்டு இடம்பெறும் பால் காய்ச்சும் நிகழ்வினையும் நடாத்தினார்.
ஏற்கனவே யாழ். அரசாங்க அதிபரினால் அறிவிக்கப்பட்டிருந்ததன் பிரகாரம் நிர்மாணப் பணிகளுக்காக மணல் தேவைப்படுவோர் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியத்தின் பணிமனையில் பதிவினை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு திரண்டிருந்தோர் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களாகிய உங்கள் சுமைகள் குறைக்கப்படுவதுடன் உங்களுக்கான சேவைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கையினையும் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இன்றுகாலை யாழ். நகர் நான்காம் குறுக்குத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மகேஸ்வரி அறக்கட்டளை நிதியத்தின் வடமாகாண பணிமனைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக அப்பணிமனையினைத் திறந்து வைத்தார். பெருமளவு அன்பர்கள் நல்லுள்ளங்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டிருந்த நிலையில் பணிமனையினை நாடா வெட்டி திறந்து வைத்த அமைச்சர் தேவானந்தா அவர்கள் தொடர்ந்து மங்களகரமான நிகழ்வினை முன்னிட்டு இடம்பெறும் பால் காய்ச்சும் நிகழ்வினையும் நடாத்தினார்.
ஏற்கனவே யாழ். அரசாங்க அதிபரினால் அறிவிக்கப்பட்டிருந்ததன் பிரகாரம் நிர்மாணப் பணிகளுக்காக மணல் தேவைப்படுவோர் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியத்தின் பணிமனையில் பதிவினை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு திரண்டிருந்தோர் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களாகிய உங்கள் சுமைகள் குறைக்கப்படுவதுடன் உங்களுக்கான சேவைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கையினையும் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Response to "மகேஸ்வரி அறக்கட்டளை நிதிய பணிமனை இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது."
แสดงความคิดเห็น