jkr

மனித உரிமைகள் தினம் இன்று : திஸ்ஸநாயகத்துக்கு கடூழியச் சிறை வழங்கி 100 நாள்


ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு மனித உரிமைகள் தினமான இன்றுடன் (டிசம்பர் 10ஆம் திகதி) நூறு நாட்கள் ஆகின்றன.

ஓகஸ்ட் 31ஆம் திகதி திஸ்ஸநாயகத்திற்கு இருபது வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி இலங்கை அரசாங்கம் அவரைச் சிறையிலிடைந்திருந்தது.

ஊடக சுதந்திரத்திற்காகவும் போருள் அகப்பட்டிருந்த மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ஊடகவியலாளரான திஸ்ஸநாயகத்தின் பணிகளை இந்நாளில் நினைவுகூர்வதோடு அவர் கடூழியச் சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு நூறு நாட்களானதையும் இத்தருணத்தில் நினைவுகூர வேண்டும் என இணையத் தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

"திஸ்ஸநாயகத்தை உடனடியாக விடுதலை செய்வதற்கான அழுத்தம் அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் முதன் முதலில் சிறையில் அடைக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

'நோர்த் ஈஸ்டன்' என்ற மாதாந்த சஞ்சிகையை அவர் எழுதி பிரசுரித்து வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மனித உரிமைகள் தினம் இன்று : திஸ்ஸநாயகத்துக்கு கடூழியச் சிறை வழங்கி 100 நாள்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates