jkr

தென்பகுதியில் இருந்து ஒரு தொகை நூல்கள் யாழ் நூலகத்திற்கும் பல்கலைக்கழக நூலகத்திற்கும் கையளிக்கப்பட்டன! 11.12.2009 - வெள்ளிக்கிழமை

பல்வேறு பாதிப்புகளுக்கும் அழிவுகளுக்கும் உட்பட்டுள்ள வட பகுதியை மீளக் கட்டியெழுப்புவதில் கடுமையாக உழைத்து வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை வழங்க வாய்ப்பு கிடைத்தமை தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி லயனல் பிரேமசிறி அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் (11) மாலை யாழ் நூலகக் கேட்போர் கூடத்தில் நூல்களைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தென்பகுதியில் இருந்து பின நிறுவனத்தின் உதவியுடன் ஒரு தொகை நூல்களைக் கொண்டு வந்து யாழ் நூலகத்திற்கும் யாழ் பல்கலைக்கழக நூலகத்திற்கும் கையளிக்கும் மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.

மேற்படி நூல்களைக் கொண்டு வந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ் நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களில் சிலவற்றை இன்றைய தினம் கையளிப்பதாகவும் மேலும் தேவைப்படும் புத்தகங்களை யாழ் நூல் நிலையம் கொள்வனவு செய்து கொள்ள தாங்கள் உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்ததுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பிரதியமைச்சராகப் பணியாற்றி வரும் தனக்கு அமைச்சர் அவர்களின் கீழ் பணியாற்றக் கிடைத்தமை மிகுந்த மனத் திருப்தியை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் பின நிறுவனத் தலைவர் உட்பட பலர் உரையாற்றியதுடன் வெகுதூரத்தில் இருந்து யாழ் நூலகத்திற்கென இந்நூல்களைக் கொண்டு வந்து கையளித்த பிரதியமைச்சருக்கு யாழ் மக்கள் சார்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தென்பகுதியில் இருந்து ஒரு தொகை நூல்கள் யாழ் நூலகத்திற்கும் பல்கலைக்கழக நூலகத்திற்கும் கையளிக்கப்பட்டன! 11.12.2009 - வெள்ளிக்கிழமை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates