jkr

கிழக்கில் 9,95,612 பேர் வாக்களிக்கத் தகுதி


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது கிழக்கு மாகாணத்தில் 9 லட்சத்து 95 ஆயிரத்து 612 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

திருகோணமலை மாவட்டம் திருகோணமலைத் தொகுதி - 86 ஆயிரத்து 685 பேர் ,சேருவில தொகுதி -69 ஆயிரத்து 47 பேர் ,மூதூர் தொகுதி - 85 ஆயிரத்து 401 என 2 லட்சத்து 41 ஆயிரத்து 133 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அம்பாறைத் தொகுதியில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 479 பேர்,பொத்துவில் தொகுதி -ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 779 பேர், கல்முனைத் தொகுதி - 66 ஆயிரத்து 135 பேர்,சம்மாந்துறைத் தொகுதி - 71 ஆயிரத்து 442 பேர் என 4 லட்சத்து 20 ஆயிரத்து 835 பேர் வாக்களிகத் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு தொகுதி - ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 135 பேர் .பட்டிருப்புத் தொகுதி 80 ஆயிரத்து 972 பேர் ,கல்குடாத் தொகுதி 97 ஆயிரத்து 537 பேர் என மொத்தம் 3 லட்சதது 33 ஆயிரத்து 644 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கிழக்கில் 9,95,612 பேர் வாக்களிக்கத் தகுதி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates