ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிள்ளையானின் ரி.எம்.வி.பியின் தீர்மானம் குறித்து குழப்பநிலை!
கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையானின்) அமைப்பான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.பி.வி) கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கத் தீர்மானித்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளபோதிலும் அக்கட்சி நேற்று விடுத்த அறிக்கையானது, அது இன்னும் இவ்விடயத்தில் எந்தப்பக்கம் சாய்வது என்பதைத் தீர்மானிக்காத மதில்மேல் பூனை நிலையில் இருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எம்மக்களின் இழந்த வாழ்வை மீட்டெடுத்து, எமக்கான உறுதியான அரசியல்தீர்வைத் தரக்கூடிய கட்சியைப் பின்புலமாகக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டும் என்று அக்கட்சி தனதறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிக அதிகாரங்களைக் கொண்ட அரசியல்தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் அரசியல் ரீதியான இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ள இச்சமயத்தில் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுக்கின்ற அனைத்து அரசியல்கட்சிகளையும் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புகளையும் எம்முடன் இணைந்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு வேண்டி நிற்கிறோம் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
0 Response to "ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிள்ளையானின் ரி.எம்.வி.பியின் தீர்மானம் குறித்து குழப்பநிலை!"
แสดงความคิดเห็น