பாதுகாப்பு செயலரின் உத்தரவுக்கமையவே சரணடைந்த புலிதலைவர் சுட்டு கொல்லப்பட்டனர்- முன்னைநாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக!
பாதுகாப்பு செயலரின் உத்தரவுக்கமையவே சரணடைந்த புலிகளின் தலைவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர் என முன்னைநாள் இராணுவ தளபதியும் தற்போதைய ஜனாதிபதி பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியின் சகேதரரான பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமையவே களமுனையில் இருந்த படை படை தளபதிகள் சரணடைந்த புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொன்றனர்.
சீனாவுக்கான பயணத்தினை தான் மேற்கொண்டிருந்த சமயம் படை தளபதிகளுக்கான உத்தரவை பாதுகாப்பு செயலர் தானே நேரடியாக மேற்கொண்டு 58வது படையணியின் தளபதி சர்வேந்திர சில்வாவுக்கு சரணடைந்தவர்கள் அனைவரையும் சுட்டு கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் சரத் பொன்சேகா இன்றையதினம் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் வெள்ளைக்கொடியை ஏந்திவந்த புலிகளின் தளபதிகளை சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இது குறித்து இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவிக்கையில்இ இவ்வாறான செய்திகள் நிறையவே சரத் பொன்சேகாவால் வெளியிடப்படலாம் ஆகவே இவற்றுக்கு எல்லாம் நான் கருத்துகூற விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் சரத் பொன்சேகாவின் கூற்றை மறுத்துள்ளார்.
0 Response to "பாதுகாப்பு செயலரின் உத்தரவுக்கமையவே சரணடைந்த புலிதலைவர் சுட்டு கொல்லப்பட்டனர்- முன்னைநாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக!"
แสดงความคิดเห็น