jkr

புலிகள் என்னைத் தாக்கும் சாத்தியம் உள்ளது : ஜெனரல் சரத்


விடுதலைப் புலிகள் தம் மீது தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியம் உள்ளது என்று முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனாதிபதி தேர்தல் எதிரணிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா அச்சம் வெளியிட்டுள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் சரத் வெளியிட்டுள்ளதாவது:

"யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிர் தப்பியிருக்கக் கூடும். குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் இடம்பெயர் மக்களுடன் சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.

விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போதிலும், சில தற்கொலை குண்டுதாரிகள் எஞ்சியிருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் உறுதியாகவே காணப்படுகின்றது.

எனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. யுத்த வெற்றிக்கு நாமே காரணம் என படையினரும், பொலிஸாரும் நம்புகின்றனர்.

கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்".

இவ்வாறு அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "புலிகள் என்னைத் தாக்கும் சாத்தியம் உள்ளது : ஜெனரல் சரத்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates