jkr

ஐதேக மட்டு. முகாமையாளரின் இல்லம் மீது கைகுண்டுத் தாக்குதல்


ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்னம் சசிதரனின் இல்லம் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் c தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது இல்லம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது அவரும் அவரது குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்தனர்.

சம்பவத்தின் போது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த போதிலும் சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் கரு ஜயசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு, அரசரட்னம் சசிதரனின் இல்லத்தில் கட்சி பிரமுகர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியான பின், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறை இதுவாகும்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஐதேக மட்டு. முகாமையாளரின் இல்லம் மீது கைகுண்டுத் தாக்குதல்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates