மக்கள் கருத்தை பரிசீலிக்க த.தே.கூட்டமைப்பு தீர்மானம்
"ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் கருத்துக்களை உள் வாங்கி அதற்கு அமையவே தீரமானம் எடுக்கும்."; என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்
"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மர்றுபட்ட கருத்துக்களையும்; செய்திகளையும் வெளியிட்டு வந்தாலும் அது அவர்களின் சொந்த கருத்தேயன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்லஎமது கட்சி பாராளுமன்ற உறுப்பினரக்ளைப் பொறுத்த வரை கொள்கை ரீதியாக ஒன்று பட்டு உறுதியுடன் இருக்கின்றார்கள். இந் நிலையில் இது தொடர்பாக தமிழ் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை " என்றும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள சில விடயங்கள் வருமாறு:-
"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே பல தடவைகள் கூடி பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்துள்ளார்கள்.இதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்டங்களுக்கு சென்று மக்களின் கருத்துக்களை அறியும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்
தமிழ் மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்.தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியான வேட்பாளரொருவரை நிறுத்துவதில்லை என்று ஏக மனதாக முடிவெடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த வரை எந்த வேட்பாளரை ஆதரிப்பது ?அல்லது தேர்தல் பகிஸ்கரிப்பா ? அல்லது வாக்கு சீட்டு நிராகரிப்பா ? போன்ற விடயங்கள் குறித்தும்
பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது ?என்பது குறித்தும் ஆழமாக பரிசீலித்துமே இறுதி முடிவு எடுக்கப்படும் .
மக்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களே தவிர பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக மக்கள் இல்லை என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.." என்றும் கூறப்பட்டுள்ளது.
0 Response to "மக்கள் கருத்தை பரிசீலிக்க த.தே.கூட்டமைப்பு தீர்மானம்"
แสดงความคิดเห็น