jkr

இளம்விதவை படுகொலை : அடையாள அணி வகுப்பில் சந்தேக நபர்கள்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இளம் விதவையொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஆஜர் படுத்துமாறு கல்குடா பொலிசாருக்கு வாழைச்சேனை மஜிஸ்திரேட் ரி.சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை மருதநகரைச் சேர்ந்த வாணி எனப்படும் இராமச்சதிரன் கோமதி (வயது 24) என்பவர் கடந்த 14ஆம் திகதி இரவு வீட்டிலிருந்த வேளை, கத்தியால் வெட்டியும் இரும்புக் கம்பியால் தாக்கியும் படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவரது சகோதரி முறையான இளம்பெண் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்திய போது, இதற்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான மருதநகரைச் சேர்ந்த ஆனந்தன் ஸ்ரீ ரஞ்சினி, சொருவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் ரூபன் மற்றும் அழகேந்திரன் ஹரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுத் துறையினரையும் இது தொடர்பான விசாரணைமேற் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் பணித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இளம்விதவை படுகொலை : அடையாள அணி வகுப்பில் சந்தேக நபர்கள்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates