jkr

வனத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலி


மட்டக்களப்பு பாசிக்குடாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலியானார்.

நேற்று மாலை இடம் பெற்ற இச்சம்பவத்தில் காலியைச் சேர்ந்த விக்கிரமசிங்க அக்கலங்க (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிரித்தலையிலுள்ள வன ஜீவராசிகள் பயிற்சிக் கல்லூரியில் 3 மாத பயிற்சியை முடித்துக் கொண்ட அதிகாரிகள் வெளியேறுவதை முன்னிட்டு இந்த சுற்றுலாப் பயணத்தை பாசிக்குடாவுக்கு மேற்கொண்டிருந்தனர்.

இச்சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட அதிகாரிகள் இருவர் கடலில் மூழ்கியதாகவும் ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட நபர் நீரில் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வனத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates