பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரச உயர்மட்ட குழு இந்தியா விஜயம்!
பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கின் வசந்தம் செயலணிக்குழுவின் தலைவருமான பஷில் ராஜபக்ஷ ஆகியோரடங்கிய உயர்மட்ட குழுவினர் இந்தியாவிற்கான இரண்டு நாள் உத்தியோகப+ர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் வியாழக்கிழமை இந்தியா பயணமாகவுள்ளனர்.
வியாழக்கிழமை புதுடில்லியை சென்றடையும் உயர்மட்ட இலங்கை அரசின் உயர் குழுவினர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாரயணன், வெளியுறவு செயலர் நிருபாமா ராவ், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார் ஆகியோர் உட்பட மேலும் சில முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு நடாத்துவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது
0 Response to "பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரச உயர்மட்ட குழு இந்தியா விஜயம்!"
แสดงความคิดเห็น