jkr

ஒழுக்கமிகு சமுதாயத்தை உருவாக்குவோமென்கிறார் ஜனாதிபதி

Photobucket
கொழும்பு லும்பினி வித்தியாலயத்தின் 80வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் கல்வித் துறை பின்னடைவு கண்டிருந்ததை தாம் அறிவதாகவும் கல்விக்காக அதிக கவனம் செலுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் வடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக அதிக நிதி செலவிடப்பட்டதாகவும் இரண்டாவதாக கல்விக்கும் சுகாதாரத்திற்கும் நிதி செலவிடப்பட்டதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

தேக ஆரோக்கியமுள்ள எதிர்கால சந்ததி ஒன்று இருக்கவேண்டுமென்ற காரணத்தினாலும் நாட்டை நேசிக்கின்ற சமுதாயமொன்று இருக்கவேண்டுமென்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உலக நாடுகளுடன் போட்டியிடக் கூடிய எதிர்கால சந்ததியினரே நாட்டுக்குத் தேவை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சிறந்த சமூகத்தை நாட்டில் உருவாக்கும் பொறுப்பு அனைவருக்குமுண்டெனவும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஒழுக்கமிகு சமுதாயத்தை உருவாக்குவோமென்கிறார் ஜனாதிபதி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates