தேர்தல் முடியும் வரை நியமனம், இடமாற்றம், பதவியுயர்வு ரத்து!
ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை, அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், அரசியல் யாப்புச் சபைகள் என்பவற்றில் பதவிகளுக்குப் புதிதாக ஆட்களை நியமித்தல், இடமாற்றம் வழங்குதல், பதவியுயர்வு வழங்குதல் என்பவற்றை ரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
அரசியல் யாப்பின் 104 (ஆ) 4, மற்றும் 104 (ஏ) ஆகிய பகுதிகளில் விதந்துரைக்கப்பட்டமைக்கு அமையவே இந்த அறிவிப்பை ஆணையாளர் விடுத்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தலொன்றைத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
அரச நிறுவனங்களில் நியமனங்கள், பதவியுயர்வு, இடமாற்றம் என்பவை இடம்பெறுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலுக்கமைய நவம்பர் 23ந் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் இடம்பெற்ற அனைத்து நியமனங்கள், இடமாற்றங்கள், பதவியுயர்வுகள் என்பவற்றை உடனடியாக ரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
0 Response to "தேர்தல் முடியும் வரை நியமனம், இடமாற்றம், பதவியுயர்வு ரத்து!"
แสดงความคิดเห็น