jkr

புனரமைப்புச் செய்யப்பட்ட கசூரினா கடற்கரை இன்று திறந்துவைக்கப்பட்டது.

வடமாகாணத்தில் பிரசித்திபெற்ற கடற்கரை சுற்றுலா மையங்களில் ஒன்றான காரைநகர் கசூரினா கடற்கரை புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

மிக நீண்ட காலமாக உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பிரசித்தி பெற்ற தலமாக கசூரினா கடற்கரையானது திகழ்ந்திருந்தது. சுற்றுலா மையமாக மட்டுமன்றி யாழ். மாவட்ட பாடசாலைகளின் கடற்சாரணர்களின் பாசறை மையமாகவும் நெடுங்காலம் விளங்கியிருந்தது. ஆயினும் அண்மைய யுத்த நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்பு பிரதேசமாக விளங்கியிருந்ததுடன் அதற்கு மேலாக 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது மிக மோசமாக பாதிக்கப்பட்டும் இருந்தது.

இந்நிலையில் காரைநகர் பிரதேச சபையின் பரிபாலனத்திற்குட்பட்ட கசூரினா சுற்றுலாமையம் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோரின் நேரடி வழிகாட்டலிலும் நிதி ஏற்பாட்டிலும் புனரமைப்பு செய்யப்பட்டு இன்றையதினம் மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கசூரினா பிரதேசத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோரை பிரதேச மக்கள் மேளதாள வாத்தியங்களுடனும் பொய்க்கால் குதிரை ஆட்டத்துடனும் ஆரவாரமாக அழைத்துச் சென்றனர். இதனையடுத்து உத்தியோகபூர் நடுகல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் திரைநீக்கம் செய்து வைத்ததை அடுத்து கசூரினா கடற்கரையிலேயே பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச சபைச் செயலாளர் இரா லோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி வடமாகாண உள்ளுராட்சி செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி ரொமேஷ் யாழ். உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் காரைநகர் பிரதேச செயலாளர் ஜெயசீலன் காரைநகர் கடற்படை கட்டளை அதிகாரி கொமாண்டர் குமார காரைநகர் ஈபிடிபி பொறுப்பாளர் ரஜனி ஆகியோர் உள்ளிட்ட பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் அதிகாரிகள் ஊழியர்கள் ஆகியோருடன் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் கசூரினா கடற்கரையானது எவ்வாறு அமைந்திருக்கும் என்பதைக்குறிக்கும் சிற்ப வடிவிலான நேர்த்தியான கலை உருவம் அங்கிருந்தோர் அனைவரையும் கவர்ந்தமை விசேட அம்சமாகும். இன்றைய கசூரினா கடற்கரை உத்தியோகபூர்வ திறப்பு நிகழ்வின் நினைவினை முன்னிட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஆளுநர் சந்திரசிறி அவர்களும் கசூரினா மரக்கன்றுகளை கசூரினா கடற்கரையில் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "புனரமைப்புச் செய்யப்பட்ட கசூரினா கடற்கரை இன்று திறந்துவைக்கப்பட்டது."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates